ஆழ்ந்த அனுதாபங்கள்

அண்மையில் யாழ்ப்பாண நகர உயர்பாதுகாப்பு வலயத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் எமது கணித ஆசிரியர் க.மோகன் காயமடைந்ததுடன் அவரது பத்து வயது மகன் உயிரிழந்துள்ளார்.
இந்த துரதிருஷ்டமான சம்பவங்களால் பெரிதும் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது க.பொ.த(உ/த) பிரிவு மாணவர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த ஏனைய பொதுமக்களும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
_____________________________________________________________
இதுபற்றி நிறைய எழுதினேன், இரண்டு நாள் கழித்து திரும்ப யோசித்துப்பார்த்தேன்,,
எழுதியிருக்க வேண்டாம் என்று தோன்றியது..
அழித்தாயிற்று!!
Comments